ஒரு நாளில் நம்முள் எத்தனை விதமான உணர்வுகள் வந்து செல்கின்றன. அன்பு,கருணை வெறுப்பு, கோபம்,பொறாமை,மகிழ்ச்சி , சோகம்,பயம். இதனின் கலவைகள்!!. பயம் கலந்த கோபம், சோகம் கலந்த மகழ்ச்சி,கருணை கலந்த அன்பு இப்படி பல பல கலவைகள்.
மேலும் நம் குழந்தைகளுக்கு பொருளாதார , உடல் நிலை வளர்ச்சியில் அக்கறை காட்டுவதை போலவே , மனதின் மேம்பாற்றிகாக சில முயற்சிகளை எடுக்கலாம். பொருளாதார மேம்பாட்டை மட்டுமே குறிகோளாக கற்பிக்கும் பள்ளிகளை தவிர்க்கலாம்...
நம்முடைய ஒரு நாளானது, இப்படி பல உணர்வுகளின் கலவைகளாய் அமைகின்றது. நாம் ஒரு நொடியிலாவது இவ்வுணர்வுகளின் பிடியில்லாமல் இருகின்றமா? என்னால் நிச்சியமாய் சொல்ல முடியவில்லை. உணர்வுகளின்
வீர்யத்தின் தன்மை வெவேராக இருக்கலாம். ஆனால் எப்போதும் நாம் உணர்வுகளின் பிடியிலேயே இருகின்றோம்.
பல சமயங்களில் நாம் நம்முடைய வீர்யமான உணர்வுகாலயே அடையாளபடுத்த படுகின்றோம்.
இவ்வுணர்வுகளின் அடிப்படை என்ன? நம்முடைய உணர்வுகளுக்கு ஆதாரமாய் இருப்பது எது? மேல் ஓட்டமாய் சிந்தித்தால் நம்முடைய உணர்வுகளுக்கு நாம் இருக்கும் சூழ்நிலையே காரணம் என்று நினைக்க தோன்றுகின்றது. பல புத்தகங்கள், வாசகங்கள் அதையே சொல்கின்றன.
"மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொள்ளுங்கள் என்று!!"
ஆனால் அறிவியல் ரீதியாக சிந்தித்தால் ஒவ்வொரு உணர்வும் நம்முள் ஏற்படும் ரசாயன மாற்றமே! இதே கோட்டில் சிந்தித்தால் நம்முடைய ஒவ்வொரு நாளும் நம்முள் ஏற்படும் ரசாயன மாற்றம் மட்டுமே. இர்ரசாயன மாற்றத்திற்கு நம் சூழ்நிலைகள் ஒரு தூண்டுகோலாய் அமைகின்றது.
ஆனால் பல சமயங்களில் நம் சூழ்நிலைகள் மாறினாலும் நம் உணர்வுகள் தேங்கி விடுகின்றன.
எடுத்துகாட்டாக நாம் அலுவலகத்துக்கு வாகன நெரிசலில் செல்லும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வு அலுவகத்தில் குளுருட்டபட்ட அமைதியான சூழ்நிலையிலும் தொடர்வது ..
நம்முடைய வாழ்வின் தரத்தை நாம் பல்வேறாக அளகின்றோம். நம்முடைய பொருளாதார நிலைமை, நாம் சேர்த்து வைதிருகோம் பொருட்கள் , நல்ல உணவு மற்றும் குடி நீர் கிடைப்பது .. இப்படி பல பல..அனால் இவை அனைத்துமே வெளி நிலையில் உள்ள வாழ்வின் தரத்தையே தீர்மானிகின்றன.. உண்மையில் நாம் வாழ்வின் தரம் நம்முடையே இந்த நொடி பொழுதின் உணர்வாலேயே தீர்மானிக்க படுகின்றது..சற்று சிந்தித்து பார்த்தால் நாம் ஒரு ஐந்து நட்சதர விடுதியில் எல்லா சொகுசு வசதிகளும் கிட்டும் அறையில் தங்கி இருந்தாலும் , மனம் முழவதும் கோபம் ,
பொறாமை நிறைதிருந்தால் நம் வாழ்கை தரம் உயர்ந்த நிலையில் உள்ளது என்று எண்ண முடியுமா?
இதற்கு நாம் என்ன செயலாம்? நம்முடைய பொருளாதார மற்றும் உடல்நிலை வளர்சிக்காக நேரம் செலவளிப்பது போல நம்முடைய மனதின் மேம்பாற்றிககவும் நேரத்தை செலவிடலாம். குறுகிய மனதை அகலமாக்கும் புத்தகங்கள் , நல்ல இசை , விருப்பமான கலையை கற்றல் முதல் படியாக அமையலாம்.
நம்முடைய கலாச்சாரத்தில் மனதின் மேம்பற்றிகாக பல பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு பல கண்டுபிடுபுகள் உள்ளன.. அவற்றுள் சில வற்றை நாம் பின்பற்றினாலே உடனடி மாற்றத்தை உணரலாம்..
உங்களுக்கு சில வழிமுறைகள் தெரிந்தால் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள் ..
You should correct the corrigendum before publishing. It stops the flow.
ReplyDeleteyeah .. actually I am irritated to go back and forth correct the spellings :) . Please suggest me a better editor :)
Delete